10. இலைக்கருகல் நோய் - நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்
இலைக்கருகல் நோய் : மைக்ரோடோச்சியம் ஒரைசே
தாக்குதலின் அறிகுறிகள்:
இலை நுனியிலிருந்து கீழ்நோக்கி மங்கிய அல்லது கரும்பழுப்பு நிறத்துடன் புள்ளிகள் காணப்படும்.
முதிர்ந்த இலைகளில் வெளிரிய பழுப்பு நிற நீள வடிவமுடைய ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகள் காணப்படும்.
இலைத்தாளில் பல புள்ளிகள் இணைந்து, பின் இறுதியில் இலைகள் கருகிவிடும்.
நோய் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து பின் இலைகள் கருகியது போன்று காட்சியளிக்கும்.
ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய இலை நுனிகள் மற்றும் இலை ஓரங்கள். நோய் தாக்கப்பட்ட இலை நுனிகளில் நடுநரம்பின் அருகில் பிளவு ஏற்படும்.
குறிப்பாக அதிக காற்றின் போது இலைநுனிப்பிளவுகள் பெருமளவில் காணப்படும்.
மங்கிய அல்லது கரும்பழுப்பு நைவுப்புண்
நீள் சதுர வடிவ நைவுப்புண்
நோய்க் காரணி:
பூசணத்தின் மேல்பரப்பில் பூசண இழைச் சிதில்கள் உருவாகின்றன. இவை வில் வடிவத்திலிருந்து நிலா வடிவமாகவும், இளமையாக இருக்கும்போது ஒற்றை உயிரணு (திசு) கொண்டது.
முதிர்ச்சி நிலையில் 2 உயிரணுக்களுடனும் அவ்வபோது 2-3 குறுக்குச் சுவருடனும் காணப்படும். ஆஸ்கஸ் நீள உருளை வடிவத்திலிருந்து குண்டாந்தடி வடிவமாகவும், ஒருகுமிலுடனும் காணப்படும்.
(அஸ்கஸின் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்கள் ஏறக்குறைய விறைப்பானதாக இருக்கும். மேலும் அவை பூசணவித்துக்கள் வெளிவரும்போதும் பிரியாது). அஸ்கோஸ்போர்ஸ் (பூசண இழைகள்) ஒன்றாக இணைந்தும், நிமிர்ந்தும், சற்று வளைந்தும், 3-5 குறுக்குச் சுவருடனும் காணப்படும்.
கட்டுப்பாடு:
அதிகளவு உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கார்பென்டசீம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
மேன்கோசிப் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடு, ஆகிய ஏதாவது ஒன்றை இலைவழி உரமாக அளிக்கவேண்டும்